ரணிலே பிரதமர்:ஜதேக விடாப்பிடி!

பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவே நியமிக்கப்படுவார் என ஐக்கிய தேசிய கட்சி உத்தியோகபூர்வமாக இரா.சம்பந்தனுக்கும், ஜனாதிபதி மைத்திரிக்கும் அறிவித்துள்ளது.

29ம் திகதி இரா.சம்பந்தன் பிரதமர் ஒருவரை கட்சி சார்பில் பரிந்துரைக்குமாறு ஜக்கிய தேசியக்கட்சிக்கு கடிதம் அனுப்பியமைக்கு இணங்க, ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹசீம் இந்த கடிதத்தை இன்று அனுப்பியுள்ளார்.


எனினும் ரணிலை பிரதமராக்க முடியாதென மைத்திரி மறுதலித்துவருகின்றார்.அத்துடன் ஜக்கிய தேசியக்கட்சியின் பிரதமர் பதவிக்கான வேறு நபர்களை முன்னளிக்க அவர் கோரியும் வருகின்றார்.

எனினும் ஜக்கிய தேசியக்கட்சியோ பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவே நியமிக்கப்படுவார் என விடாப்பிடியாக உள்ளது.

இதனால் இணக்க நிலையினை எட்டுவது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.   

No comments