படையினரிற்கு வெள்ளையடிக்கின்ற நல்லாட்சி அரசு!


படையினர் தொடர்ந்தும் இங்கிருந்தால் எமது மக்களின் வறுமையைப் பாவித்துத் தமக்குச் சாதகமாக ஒரு சூழலை ஏற்படுத்தக் கூடும் என்பதால்த்தான் நான் இராணுவத்தினரை முற்றாக வெளியேற வேண்டும் என்று கோரி வந்துள்ளேனென வடக்கு முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் கிளிநொச்சியில் வெள்ள பாதிப்பிற்குள்ளான மக்களிற்கான மனிதாபிமான உதவி வழங்கும் நிகழ்வில் இன்று கருத்து வெளியிடுகையி;ல் கொன்று குவித்த இராணுவமே இன்று கொடைகளையும் கொடுக்க முன்வந்துள்ளது. தாம் மனிதாபிமான நிறுவனமாக மாறியுள்ளார்கள் என்று ஜெனிவாவில் காட்ட வேண்டிய ஒரு கடப்பாடு அவர்களுக்கு இருக்கலாம். அதற்கு எமது மக்களை அவர்கள் பாவிக்கலாம். ஆனால் அதற்காக எமது மக்கள் எமது மக்கள் அல்ல என்று ஆகி விடாதெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments