கூட்டமைப்புடன் இரகசிய உடன்படிக்கை - ஐதேக பொலிஸில் முறைப்பாடு

ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை ஒன்று செய்துக்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் பொலிஸ் தலைமையகத்தில் முறைபாடு ஒன்றை செய்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியினர், இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளனர்.

அரசியலமைப்பிற்கு எதிரான குழு ஒன்றினால் குறித்த உடன்படிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments