தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை - ஐதேக
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை. எங்களின் ஜனநாயகப் போராட்டத்துக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளு மன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார் .
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய ‘டீல்” உள்ளது. இதன் காரணமாகவே கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது என்று மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அதேவேளை, தமிழீழத்தை வழங்க ஐக்கிய தேசியக் கட்சி இணங்கியமையினாலேயே கூட்டமைப்பு அவர்களை ஆதரித்தது என்று மகிந்த அணியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துக்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, அலரிமாளிகையில் வைத்து நேற்றுமுன்தினம் பதிலளித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு ஒப்பந்தமும் செய்யவில்லை. எங்களின் ஜனநாயகப் போராட்டத்துக்கு அவர்கள் ஆதரவு வழங்குகின்றார்கள்.
நல்லாட்சி அரசுக்கு தலைமை தாங்க வேண்டிய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கள்ளர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் தலைமை தாங்கி வருகின்றார்.
கடந்த ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி ஜனநாயகத்துக்கு முரணாக மகிந்தவை தலைமை அமைச்சராக நியமித்து சட்டத்துக்கு முரணாக புதிய அமைச்சரவை உருவாக்கி ஜனநாயகத்துக்கு விரோதமாக மைத்திரிபால செயற்பட்டார்.
அந்த அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து தற்போது நாம் வெற்றி பெற்றுள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகள் அரசமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக எம்முடன் இணைந்துள்ளன.
ஆனால், மகிந்த அணியினர் எம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர் – என்றார்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கடந்த மாதம் 29ஆம் திகதி இரவு சந்திப்பு இடம்பெற்றிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதற்கு கூட்டமைப்பு சில நிபந்தனைகளை விதித்திருந்தது.
அதனை எழுத்தில் ஏற்றுக் கொண்டு கடிதம் வழங்கவேண்டும் என்று கூட்டமைப்பு கோரியிருந்தமை நினைவில் கொள்ளத்தக்கது.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளு மன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார் .
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய ‘டீல்” உள்ளது. இதன் காரணமாகவே கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது என்று மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அதேவேளை, தமிழீழத்தை வழங்க ஐக்கிய தேசியக் கட்சி இணங்கியமையினாலேயே கூட்டமைப்பு அவர்களை ஆதரித்தது என்று மகிந்த அணியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துக்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, அலரிமாளிகையில் வைத்து நேற்றுமுன்தினம் பதிலளித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு ஒப்பந்தமும் செய்யவில்லை. எங்களின் ஜனநாயகப் போராட்டத்துக்கு அவர்கள் ஆதரவு வழங்குகின்றார்கள்.
நல்லாட்சி அரசுக்கு தலைமை தாங்க வேண்டிய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கள்ளர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் தலைமை தாங்கி வருகின்றார்.
கடந்த ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி ஜனநாயகத்துக்கு முரணாக மகிந்தவை தலைமை அமைச்சராக நியமித்து சட்டத்துக்கு முரணாக புதிய அமைச்சரவை உருவாக்கி ஜனநாயகத்துக்கு விரோதமாக மைத்திரிபால செயற்பட்டார்.
அந்த அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து தற்போது நாம் வெற்றி பெற்றுள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகள் அரசமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக எம்முடன் இணைந்துள்ளன.
ஆனால், மகிந்த அணியினர் எம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர் – என்றார்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கடந்த மாதம் 29ஆம் திகதி இரவு சந்திப்பு இடம்பெற்றிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதற்கு கூட்டமைப்பு சில நிபந்தனைகளை விதித்திருந்தது.
அதனை எழுத்தில் ஏற்றுக் கொண்டு கடிதம் வழங்கவேண்டும் என்று கூட்டமைப்பு கோரியிருந்தமை நினைவில் கொள்ளத்தக்கது.
Post a Comment