சங்கு சந்திரகுமார் நல்லம்??

 


தமிழ் தரப்புக்களிடையே இணக்க முயற்சிகளை முன்னெடுத்தவர்களையெல்லாம் துரோகிகள் அல்லது இந்திய உளவாளிகளென சாயமடித்த முன்னணியின் தமிழ் தேசிய பேரவை கதிரைக்காக ஆலாய் பறக்கிறது.அதிலும் ஈபிடிபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அங்கம் வகிக்கின்ற கூட்டணிக்கும் தயார் என முன்னணி இறங்கிவந்துள்ளது.

முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன கூட்டணி உடன்பாட்டை பெரும்பாலும் இறுதி செய்துள்ளன. நாளை (2) காலையில் இரு தரப்பும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளன. யாழ்ப்பாணத்தில் குறைந்தது இரு சபைகளை மட்டும் சங்கு தரப்பு இறுதியாக கேட்டபோது, தமிழ் அரசு கட்சி அதை வழங்க மறுத்தது. தற்போது யாழில் மட்டும் குறைந்தது 10 வரையான சபைகளை தமிழ் அரசு கட்சி இழக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைவுக்காக கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்களுக்கு இடையில் பொதுவானவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் பங்களித்த புலமையாளர்கள், ஆர்வலர்கள் என்று பலரும் இணக்கப்பாடுகளுக்கான முயற்சிகளை எடுத்தார்கள். சில முயற்சிகள் வெளிப்படையாகவும், பல முயற்சிகள் இரகசியமாகவும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், அப்போதெல்லாம் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் 'நான் பெரிதா, நீ பெரிதா? நீங்கள் துரோகிகள், நாங்கள் கொள்கைவாதிகள்! நீங்கள் உதிரிகள், நாங்கள்தான் ஏக தலைமை!" என்கிற இறுமாப்பு அரசியலுக்குள் நின்று உழன்றுகொண்டிருந்ததாக பத்திய எழுத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையை ஒரேயொரு பொதுத் தேர்தலில் தென் இலங்கையிலிருந்து வந்த தேசிய மக்கள் சக்தி மாற்றியிருக்கின்றது. தமிழ்ச் சமூகத்தில் நன்மதிப்புப் பெற்றவர்கள், புலமையாளர்கள், சட்டவாதிகள் என்று யார் யாரோவெல்லாம் முயன்று முடியாததை, 'அநுர அலை'யும் தேசிய மக்கள் சக்தியும் முடித்து வைத்திருக்கின்றது. கடந்த பொதுத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிதான், தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்திருக்கின்றன. அல்லது அப்படி ஒப்புக்காவது பேச வைத்திருக்கின்றனவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments