மகிந்தவின் கையில் மீண்டும் மந்திரக்கோல் !
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் கையில் புதிதாகத் தோன்றியுள்ள மந்திரக் கோல் தொடர்பில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு வார காலமாக மகிந்தவின் கையில் மந்திரக் கோல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்த ராஜபக்ச சோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். தேர்தல் திகதி உள்ளிட்ட பல விடயங்களையும் தனது சோதிடருடன் ஆலோசித்தே அவர் மேற்கொண்டார். மகிந்த ராஜபக்ச அரச தலைவராக இருந்த காலத்தில் அவரது கையில் கோல் ஒன்றை வைத்திருந்தார்.
அதேபோன்று பல்வேறு வர்ண கற்கள் பொறித்த மோதிரங்களையும் அணிந்திருப்பார்.
2015ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் தோற்ற பின்னர் மகிந்த தனது கையில் அவற்றை எடுத்துச் செல்வதில்லை. கடந்த ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி திடீரென தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னரும் கையில் எந்தவொரு மந்திரக் கோல்களையும் வைத்திருக்கவில்லை.
கடந்த சில வ◌ாரங்களாகத் தொடர்ந்து அடிக்கு மேல் அடி வாங்குகின்றார் மகிந்த ராஜபக்ச. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றம், அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு வெட்டு, ஆட்சியை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தடை என்று அடுக்கடுக்காக தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையிலேயே, மகிந்தவின் கையில் மீண்டும் மந்திரக் கோல் உலாவத் தொடங்கியுள்ளது.
புலிப் பல்லை ஒத்த நீண்ட ஒரு மந்திரக் கோலை மகிந்த ராஜபக்ச மீண்டும் கைகளில் கொண்டு திரிகின்றார். அவர் அதனைக் கைகளில் வைத்திருக்கும் ஒளிப்படம் சமூக வலைத் தளங்களில் பரவி வருகின்றது.
Post a Comment