பரிதாப மரணங்கள்:ஒரே நாளில் நால்வர் மரணம்!
முல்லைத்தீவில் இன்று மாத்திரம் இரு வெவ்வேறு சம்பங்களில் நீரில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவில்இரு பெரும் பரிதாப மரணங்கள் பதிவாகியுள்ளது
முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் தாமரைக்குளத்தில் தாமரை பறிக்கச் சென்ற இளைஞர் ஒருவரும் அவரோடு சென்ற ஒன்று விட்ட சகோதரனான சிறுவன் ஒருவனுமாக இருவர் உயிரிழந்திருந்தனர்.
இதேவேளை முல்லைத்தீவு குமுளமுனை பகுதியில் 10ம் வகுப்பில்; கல்வி கற்கும் பெண் பிள்ளைகள் இருவர் கோவில் கேணியின் அருகே செல்பி எடுக்க முற்பட்ட வேளை கேணிக்குள் தவறி விழுந்துள்ளனர்.எனினும் மீட்பதற்கு எவருமற்ற நிலையில் அவர்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரேநாளில் இருவேறு சம்பவங்களால் நால்வர் மரணித்தமை பெரும் சோகத்தை தோற்றுவித்துள்ளது.
Post a Comment