ஐ.தேக.வுடன் இணைந்து ஆட்சியமைக்கத் தயாராகும் சு.க வின் 14 உறுப்பினர்கள்
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இரவு இடம்பெற்றது.
ஐக்கிய தேசிய முன்னணியுடனான சந்திப்புக்கு நேற்று நேரம் ஒதுக்கப்பட்டிருந்தபோதும் அதனை இன்று வரை ஒத்தி வைத்த அரச தலைவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசரச் சந்திப்பை நடத்தினார்.
இந்தச் சந்திப்பின்போது, மகிந்த தலைமையிலான அரசு தொடர்பில் அதிருப்தியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து இடைக்கால கூட்டு அரசு அமைப்பதற்கான யோசனையை அரச தலைவர் மைத்திரிபாலவிடம் முன்வைத்துள்ளனர். அரச தலைவர் இதற்கு இணக்கம் வெளியிடவில்லை என்று கூறப்படுகின்றது.
Post a Comment