தமிழ் அரசியல்வாதிகளை தூக்கியடித்த பாலித தேவப்பெரும!


தமிழ் அரசியல்வாதிகள் வேட்டிகளை மடித்துக்கட்டிக்கொண்டு வன்னியில் புகைப்படங்களிற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருக்க சிங்கள அமைச்சரொருவரோ வன்னி கிணறுகளுக்குள் இறங்கி சுத்தம் செயது அதிரடி காட்டியுள்ளார்.

தற்போதைய ரணில் அமைச்சரவையின் வாழ்வாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் - பாலித தேவப்பெரும என்பவரே தனது குழுவினர் சகிதம் இன்று கிளிநொச்சி பரந்தன் பகுதிகளில் கிணறுகளை சுத்தப்படுத்திய புகைப்படம் வைரலாகியுள்ளது.

வன்னியில் இம்முறை வேட்டியை துக்கிக்கட்டிபடி புகைப்படங்களிற்கு போஸ் கொடுத்தவர்களுள் சிறீதரன் மற்றும் டக்ளஸே முன்னின்றனர்.

இன்னொரு புறம் ரணில் மற்றும் அவரது அமைச்சர்கள் குழாமை அழைத்து வந்து கூட்டமைப்பு இலவச விளம்பரம் பெற முற்பட்டது.

அவர்கள் அனைவரையும் தாண்டி பாலித தேவப்பெரும என்பவரே தனது குழுவினர் சகிதம் இன்று கிளிநொச்சி பரந்தன் பகுதிகளில் கிணறுகளை சுத்தப்படுத்திய புகைப்படம் வைரலாகியுள்ளது.

No comments