வியாழேந்திரனுக்கு மறதி வியாதி:மனோகணேசன்!


மட்டக்களப்பில் மஹிந்த ஆட்சியில் வீடமைப்பு திட்டங்களை முன்னெடுக்கப்போவதாக புதிய அமைச்சர் வியாழேந்திரன் தெரிவத்த கருத்திற்கு முன்னாள் அமைச்சர் மனோகணேசனோ நையாண்டி தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி! இன்று உள்ள அரசாங்கம் நீடிக்குமானால் எதிர்காலத்தில், "வீடு கட்டுவேன்! காடு வெட்டுவேன்!" என்று சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், இன்று இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்த அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கியது, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அரச கரும மொழிகள் அமைச்சராக நானல்லவா?

அதை சொல்ல தம்பி மறந்து விட்டார் போலும்! இந்த ஒதுக்கீடுகளை, அவரது இன்றைய மஹிந்த அரசு அல்லது அவர் சார்ந்த அமைச்சர் செய்யவில்லை என்பதையும் சொல்ல மறந்து விட்டார் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

No comments