கண்ணீரால் ஒன்றாகுவோம் - சித்திரா கிருஷ்ணா
ஒழுக்கத்தைக் கட்டுப்பாட்டை
எங்களின் மனங்களில்
இட்டு நிரப்புதற்காய்..
எங்கள் தேசியத் தலைவர்
பொங்கியெழுந்த காலத்தில்
அவருக்கோ சிறிய
வயதாக இருந்தபோதும்,
தன் திடமான துணிவால்
எதிர்காலத்தை எதிர்கொண்டு உயர்மிகு படையைத்திரட்டிப்
பகைமுடித்த அவர்தம்
வரலாற்றிற்கு நிகர்சொல்ல
வார்த்தைகள் எதுவுமில்லை.
தாயகத்தில் சதிச்செயல்கள்
தொடர்ந்ததுவும் எம் சந்ததிகள்
அழிந்ததுவும், எங்குமே
நொந்துநாம் வாழ்வதுவும்
புதியதொரு பரிமானமாக
நிகழும் இந்நாளில்,
தூர்த்த மனங்களின் மிகுபல
துளையுண்ட இரணங்களைப்
போர்த்தவராய் வாழ்ந்து,
வார்த்தைகளுக்கு அடங்காத
வதைபுகுந்த துன்பவுணர்வோடு
நீரில் மிதக்கும் கண்களோடு..
அங்கே நிலத்தில் நின்று,
கதிர்த்து வளர்ந்து பருத்து
நிற்கும் அந்த அடக்குமுறைக்குள்
இருந்தும் அவர்களோ..
மாண்ட மாவீரர்கனை எண்ணி
எழுதிரியேந்தி, வீரம் விளங்கவே
வழிபாடுகள் செய்தும் இந்நாளில்..
உலகப்பரப்பெங்கும்
உணர்வின் கனலாகத்தோன்றி,
இணைந்தே நாம் கண்ணீரால்
ஒன்றாகுவோம் கைகள்கோர்தே
வழிபாடுகள் நிகழ்த்துவோம்!
எங்களின் மனங்களில்
இட்டு நிரப்புதற்காய்..
எங்கள் தேசியத் தலைவர்
பொங்கியெழுந்த காலத்தில்
அவருக்கோ சிறிய
வயதாக இருந்தபோதும்,
தன் திடமான துணிவால்
எதிர்காலத்தை எதிர்கொண்டு உயர்மிகு படையைத்திரட்டிப்
பகைமுடித்த அவர்தம்
வரலாற்றிற்கு நிகர்சொல்ல
வார்த்தைகள் எதுவுமில்லை.
தாயகத்தில் சதிச்செயல்கள்
தொடர்ந்ததுவும் எம் சந்ததிகள்
அழிந்ததுவும், எங்குமே
நொந்துநாம் வாழ்வதுவும்
புதியதொரு பரிமானமாக
நிகழும் இந்நாளில்,
தூர்த்த மனங்களின் மிகுபல
துளையுண்ட இரணங்களைப்
போர்த்தவராய் வாழ்ந்து,
வார்த்தைகளுக்கு அடங்காத
வதைபுகுந்த துன்பவுணர்வோடு
நீரில் மிதக்கும் கண்களோடு..
அங்கே நிலத்தில் நின்று,
கதிர்த்து வளர்ந்து பருத்து
நிற்கும் அந்த அடக்குமுறைக்குள்
இருந்தும் அவர்களோ..
மாண்ட மாவீரர்கனை எண்ணி
எழுதிரியேந்தி, வீரம் விளங்கவே
வழிபாடுகள் செய்தும் இந்நாளில்..
உலகப்பரப்பெங்கும்
உணர்வின் கனலாகத்தோன்றி,
இணைந்தே நாம் கண்ணீரால்
ஒன்றாகுவோம் கைகள்கோர்தே
வழிபாடுகள் நிகழ்த்துவோம்!
Post a Comment