ஜதேக இருவர் கைது!


ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, பாலித தெவரப் பெரும மற்றும் ஹேஷா விதானகே ஆகிய இருவரும் கொள்ளுபிட்டி பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தின் ஓய்வுப்பெற்ற மேஜரான அஜித் பிரசன்னவைத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த முதலாம் திகதி மாலை அலரி மாளிகைக்கு முன்பாக வைத்து, ஓய்வுப்பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மீது பாலித தெவரப்பெரும, ஹேஷான் விதானகே ஆகியோர் தாக்குதல் நடத்தியதாக, அஜித் பிரசன்னவால்  செய்யப்பட்ட முறைபாட்டுக்கமையவே இவர்களிருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

No comments