ஆசிரிய இடமாற்றம்:ஆளுநர் வழங்கினார்?


யாழ் வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கற்பித்தலுக்கு மேலதிகமாக உள்ள ஆசிரியர்களுக்கு உடனடி மாற்றங்களை வழங்குமாறு ஆளுநர் பணித்துள்ளாராம்.
மேலதிகமாக காணப்படும் ஆசிரியர்களை ஆசிரியர் பற்றாக்குறையாக காணப்படும் பாடசாலைகளுக்கு உடன் அமுலுக்குவரும் வகையில் மாற்றம் செய்யுமாறு ஆளுநர் விடுத்த உத்தரவிற்கு அமைய முதற்கட்டமாக 46 ஆசிரியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த வாரம் கல்வி அமைச்சுக்கு விஜயம் செய்த ஆளுநர் றெஜினோல்ட் குரே யாழ் வலய பாடசாலை அதிபர்களைஅழைத்து கலந்துரையாடினார். இதன்போது அதிகளவான பாடசாலைகளில் தேவைக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து கஸ்டப் பிரதேச பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் குறைபாட்டை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் கல்வி அமைச்சின் செயலர் எஸ்.சத்தியசீலனுக்கு பணித்திருந்தார். அதற்கு அமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளதாக ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

No comments