ஹக்கீம், ரிஷாட் மக்காவில் சந்தித்து பேச்சு !


அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளார்.

உம்ரா கடமைகளுக்காக சென்ற போது மக்காவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டடிருக்கும் நிலையில் ரவூஃப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07 பேரும் ரிஷாட் பதிதியூன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 05 பேரும் திடீரென ஹச் பயணமாக மக்காவிற்கு நேற்று சென்றனர். நாளுமன்றம் கூட்டப்படும் 14 ஆம் திகதிக்கு முதல் நாளான 13 ஆம் திகதியோ தாம் மீளத் திரும்பவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று இரு கட்சியினரும் மக்காவில் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளனர்.

No comments