பதுங்கிய சித்தார்த்தன்:நீக்கியதாக கடிதம்!


நேற்று முழுநாளும் இரா.சம்பந்தனிற்கு பதிலளிக்காதிருந்த சித்தார்த்தனை அவரது மனைவி சிக்கலில் மாட்டிவிட்ட பரிதாபம் நடந்துள்ளது.வியாழேந்திரனின் பாய்ச்சலையடுத்து இது தொடர்பில் சித்தார்த்தனுடன் பேச தொலைபேசி அழைப்பினையேற்படுத்த சம்பந்தர் உத்தரவிட்டுள்ளார்.எனினும் வருகை தந்த எந்தவொரு அழைப்பிற்கும் பதிலளிக்காது சித்தார்த்தன்; இருந்துள்ளார்.இதனால் சலித்து போய் சம்பந்தன் ஓய்ந்திருக்க உதவியாளர் சித்தார்த்தனின் மனைவிக்கு அழைப்பேற்படுத்தியுள்ளார்.அவரிடம் அவசரமாக தலைவர் பேசவேண்டியிருக்கின்றது.ஆனால் சித்தார்த்தனை அழைக்கமுடியவில்லையென தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பேசப்போகும் விடயம் பற்றி அறியாத சித்தார்த்தனின் மனைவி தனிப்பட்ட இரகசிய தொலைபேசி இலக்கத்தை வழங்கியுள்ளார்.அந்த இலக்கத்திற்கு சென்றிருந்த அழைப்பினை சித்தார்த்தன் ஏற்றிருந்த நிலையில் சம்பந்தன் வெழுத்து வாங்கியதாக தெரியவருகின்றது.

இதனிடையே மிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புளொட் அமைப்பின் சார்பில் இருந்து கட்சியின் சம்மதம் இன்றி மகிந்த அணிக்குத் தாவிய வியாழேந்திரனை புளொட் அமைப்பில் இருந்து உடனடியாக விலக்குவதனால் அவரை கூட்டமைப்பில் இருந்து விலக்குமாறு தமிழரசுக் கட்சியின் செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

கூட்டமைப்பின் சார்பில் புளொட் அமைப்பின் ஊடாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் கட்சிக்கு எதிராக எந்தவித அனுமதியும் இன்றி செயல்பட்ட வியாழேந்திரனை உடனடியாகவே கட்சியில் இருந்து நீக்கும் முடிவிற்கு புளொட் அமைப்பு தள்ளப்பட்டுள்ளது. எனவே இவரை கூட்டமைப்பில் இருந்தும் நீக்குமாறு கோருகின்றேனென சித்தார்த்தன் கடிதம் எழுத்தியுள்ளார்.

No comments