முத்தையா முரளிதரன் ஜனநாயகம் தெரியாத முட்டாள் - மனோ காட்டம்


“மூன்று வேளை சாப்பாடு” என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.


நல்லாட்சி, ஜனநாயகம் என்பவற்றையெல்லாம்விட, மூவேலையும் உணவு கிடைப்பதே பெரிய விடயம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில், மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். எனினும், முரளியின் பெயரை அவர் வெளிப்படையாக குறிப்பிடவில்லை.

No comments