முரளிதரன் முழு முட்டாள்:மனோ,குகதாசன் விமர்சனம்!


முட்டாள்தனமான கருத்துக்களால் அடிக்கடி விமர்சனங்களிற்குள்ளாகும் முத்தையா முரளிதரனுக்கு முதுகெலும்பு இல்லையென தமிழ் தரப்புக்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.அத்துடன் அவருக்கு இனமானமும் அறவே இல்லை. அவரில் மேலோங்கியுள்ளது சிங்கள அடிமைத்தனம் மட்டுமேயென முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் முதல் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாசன் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

முத்தையா முரளிதரன் சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் இந்த நாடு பெரும்பாண்மையாக வாழும் சிங்களவர்களுக்குரியது. தமிழர்கள் சிறுபான்மையாக வாழ்வதால் உரிமை தொடர்பாக பேசுவதை விட்டு மூன்று வேளை உணவையும் கல்வியையும் உறுதி செய்தால் போதுமென கூறியுள்ளார் .இதன் மூலம் முரளிதரன் தனது அடிமைத் தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் சிங்கள மக்களை விட நீண்ட வரலாற்றை கொண்டவர்கள் என்பதை மகாவம்சமே தெளிவாக கூறுகின்றது.அது மாத்திரமல்ல ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் வட கிழக்கு மாகாணங்கள் தமிழ் மன்னர்களின் ஆட்சியில் இருந்ததுடன் தமிழ் மக்கள் நீண்டகாலமாக வாழ்ந்தனர் என்பதற்கான ஆதாரங்களும் இருக்கின்றது. இந்த நாடு சிங்களவர்களுக்கு தான் சொந்தம் என கூறுவது முரளிதரனின் முதுகெலும்பற்ற தமிழ் இன உணர்வற்ற நிலையை வெளிப்படுத்தியுள்ளதென கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

No comments