முள்ளிவாய்க்கால் சென்ற திருமா!


யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட தமிழகத்தின் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 

முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு  சென்று அங்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளதுடன் தங்கு தங்கியுள்ள ஒரு குடும்பத்தின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்துள்ளார்.தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் போரினால் உயிரிழந்தவர்கள் நினைவாக தேவாலயத்தில் கட்டப்பட்ட நினைவு தூபியினையும் அவர் பார்வையிட்டு சென்றுள்ளார்.

No comments