கௌரவிக்கப்பட்ட தமிழ் தேசிய ஊடகவியலாளர்கள்!


யாழ்.ஊடக அமையத்தின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழாவும்,சிரேஸ்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இன்று 18 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை யாழ்நகரில் நடைபெற்றுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற  இந் நிகழ்வில் உன்னதமான ஊடக சுதந்திரத்தை பாதுகாத்து, ஊடகத்துறையில் தேசியம் சார்ந்து நெருக்கடியாக சூழலில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய ம.வ.கானமயில்நாதன், சண்முகராஜா யோகரட்ணம் (ராதேயன்), சின்னத்துரை தில்லைநாதன், ஆ.நா.சு.திருச்செல்வம்;, கந்தசாமி அரசரட்ணம், விநாயகம் அற்புதானந்தன், மு.வாமதேவன், இளையதம்பி சற்குருநாதன்;, நா.யோகேந்திரநாதன் அமரர்.சிதம்பரநாதன் திருச்செந்தில்நாதன், அமரர்.பொன்.பூலோகசிங்கம்; ஆகிய சிரேஸ்ர ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்ற இந்நிகழ்வில் அமரர்.சிதம்பரநாதன் திருச்செந்தில்நாதன் தொடர்பில் எழுத்தாளர் டேவிட் அவர்களும் அமரர்.பொன்.பூலோகசிங்கம்; சார்பில் மூத்த போராளியும் ஊடகவியலாளருமான காக்கா ஆகியோரும் நினைவுகளை பகிர்ந்திருந்தனர்.

கௌரவிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் தமிழ் தேசியம் சார்ந்த விடுதலைப்போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு தொடர்பில் நினைவுகூரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments