ரணிலைப் பிரதமராக்க வலியுறுத்தி 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதத்தில் கையெழுத்து


ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வலியுறுத்தி 113 பேர் கையெழுத்திட்ட சத்தியக்கடிதம் நாளையதினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.இந்த கடிதத்துடன் 113க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைக் காலை 10மணிக்கு ஜனாதிபதி செயலகத்துக்கு செல்வார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் தற்போது நாட்டில் பிரதமரோ, அமைச்சரவையோ இல்லை என்பதை தாங்கள் ஜனாதிபதியிடம் உறுதியாக தெரிவித்திருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல கூறினார்.

எனவே புதிதாக பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதையும், தற்போது இருக்கின்ற பிரதமர் நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தாரா? இல்லையா? என்பது குறித்து தம்மால் சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments