என்னாலே: என்னாலே: என்கிறார் டக்ளஸ்!


வடக்கில் நடைபெறுக்கின்ற எல்லாமுமே இனி டக்ளஸினாலேயே நடப்பதாக அவரது எடுபிடிகள் தமது பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர். அவ்வகையில் முல்லைதீவில் ஆபத்தில் தவித்தவர்களை விரைந்து மீட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீண்டவர்கள் நன்றி தெரிவித்துள்ளதாக இன்று புரளிகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்த்தகக் குளம் உடைப்பெடுத்ததன் காரணமாக உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் டக்ளஸின் துரித முயற்சியின் பயனாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அவரது கட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் அனைவரும் அனைத்த முகாமைத்துவ பிரிவினராலேயே மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது.அவர்களது விமானப்படைக்கு அறிவித்து உதவி கோரியுள்ளனர்.

ஆயினும் இனி வடக்கில் எதனையும் தனது சாதனையாக சொல்லும் டக்ளஸ் மீட்பினையும் விளம்பரமாக்கியுள்ளார்.

2015இற்கு முன்னதாக வடக்கில் அனைத்தும் தன்னால் நடப்பதாக டக்ளஸ் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருவது தெரிந்ததே. 

No comments