உருவானது நீதியரசர் ஆயம்!


நாடாளுமன்ற கலைப்பு வர்த்தமானிக்கு எதிரான மனுவை விசாரிக்க எழுவர் கொண்ட நீதியரசர்கள் ஆயம் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் குறித்த நீதியரசர்கள் ஆயத்தை உருவாக்கியுள்ளார்.

குறித்த ஆயம் எதிர்வரும் 3ம் திகதி தனது விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

ரணிலை ஆட்சிக்கதிரையிலிருந்து வீழ்த்தி மஹிந்தவை பிரதமராக்கிய மைத்திரி எதிர்வரும் 5 ம் திகதி ஜனவரி தேர்தலிற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments