புதுக்குடியிருப்பில் எரிந்தது பேரூந்து?


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று எரிந்து தீக்கிரையாகியுள்ளது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்  நேற்று (19)யாழ்ப்பாணம் பயணிகளை ஏற்றிச்சென்று திரும்பி கொண்டுவரப்பட்டு இரவு வழமையாக பேருந்து நிறுத்தும் இடமான தனது வீட்டுக்கு முன்னாள் வீதியோரத்தில் உரிமையாளர் நிறுத்திவிட்டு வீட்டில் உறங்கியிருக்கிறார்.
இரவு 11.30 மணியளவில் வீட்டில் நாய்கள் கடுமையாக குரைத்தபோது எழுந்து பார்த்தபோது கண்ணாடிகள் வெடித்து பறக்கும் சத்தம் கேட்டது உடனடியாக வெளியில் வந்து பார்த்தபோது  பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
உடனடியாக அருகில் இருந்தவர்களது உதவியுடன் முடிந்தவரை தீயை அணைக்க முயற்சித்து அணைத்ததாகவும் இருப்பினும் சுமார் பதினெட்டு இலட்சம் ரூபா இழப்பு ஏற்ப்பட்டுள்ளதாக பேருந்து உரிமையாளர் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு சென்ற புதுக்குடியிருப்பு போலீசார் விசாரணைகளை மேற்கொண்டதோடு பல்வேறு கோணத்தில்  கிளிநொச்சி தடயவியல் பொலிசாரின் உதவியுடன்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

No comments