நாடாளுமன்ற அதிரடி: காயங்களிற்கு சிகிச்சை!


இலங்கை சபாநாயகர், மற்றும் செங்கோலின் பாதுகாப்புக்காக, சபைக்குள் பிரவேசித்த இலங்கை காவல்துறை மீது மஹிந்த அணி நடத்திய சிறப்பு அதிரடி தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.ரணில் ஆதரவு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும்,காவல்துறை மீதுமே மிளகாய்த்தூள் கலந்த நீர் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால், நாடாளுமன்ற உறுப்பினர்களாக விஜித்த ஹேரத், காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.


No comments