கோப்பாய் கல்வியற் கல்லூரியில் வைரஸ் காய்ச்சல் - 25 மாணவர்கள் வீட்டிற்கு


யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியைச் சேர்ந்த 25 மாணவர்கள் வைரஸ் காய்ச்சல் காரணமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

சுகாதாரப் பிரிவினர் நேற்று (17 )கல்லூரிக்குள் இறங்கி பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்ட போது 25 மாணவர்கள் வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டமை தெரியவந்தது. உடனடியாக மாணவர்களை வெளியேற்றுமாறு கல்லூரி நிர்வாகத்தினருக்கு சுகாதரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

அதனை அடுத்து கல்லூரி முதல்வர் காய்ச்சலுக்கு உட்பட்ட மாணவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். கல்லூரி நிர்வாகம் சுகாதாரத்தை சரியான முறையில் பேணாத காரணத்தால் மாணவர்களுக்கு வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் ஒருசிலருக்கே காய்ச்சல் தொற்று ஏற்பட்டதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள கல்லூரி அதிபர் விடையங்களை மூடிமறைக்க முயல்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுவருகிறது.

No comments