சுதந்திரக்கட்சி அமைப்பாளர் கைத்துப்பாக்கியுடன் கைது


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவனல்லை தொகுதி அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான இம்தியாஸ் காதர், சட்டவிரோத துப்பாக்கிகள் சகிதம் இன்று காலை விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


அவரிடம் இருந்து அனுமதிப்பத்திரமற்ற மூன்று துப்பாக்கிகளும், அதற்கான தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றையடுத்து அவரது வீட்டை இன்று சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படையினர், தேடுதல் வேட்டை நடத்தியே இவற்றை மீட்டுள்ளனர்.

பிரபுக்கள் பாதுகாப்புக்கு வழங்கப்படும் துப்பாக்கிகளே கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments