சிறுப்பிட்டி தோட்டக் காணியில் மோட்டார் செல் மீட்பு


இராசவீதி சிறுப்பிட்டி பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றிற்குள் இருந்து மோட்டார் செல் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் குறிப்பிட்டனர்.

நேற்றையதினம்(14) உரிமையாளர் தோட்டக்காணியினை உழுது கொண்டிருந்த போது செல் குண்டு தென்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து மண்ணில் புதையுண்டு இருந்த செல்குண்டு மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments