அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்கட்சியை வெளியேறக் கோரிக்கை


தற்போதைய அரசாங்கத்தில் இருந்து சிறிலங்கா சுதந்திர கட்சி விலகுவதற்கு சரியான தருணம் உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கனேமுல்ல பிரதேசத்தில் விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே மகிந்த ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மக்களுக்கும் பாதக நிலைமைகளையே தோற்றுவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments