உண்ணாவிரதி மீண்டும் வைத்தியசாலையில்?


உண்ணாவிரதம் தொடர்கின்ற நிலையில் அரசியல் கைதிகளில் ஒருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் தில்லைராஜா என்பவரே அனுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதனிடையே அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் கேள்வி எழுப்பவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.அத்துடன் முக்கிய விடயங்களில் இதுவும் ஒன்றாக ஜனாதிபதியுடன் உரையாடப்படுமெனவும் அவர் யாழில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் பொது அமைப்புக்கள் இணைந்து அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்தி இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தன.

No comments