கொழும்பில் என்ன நடக்கிறது ? மைத்திரி மோடி தொலைபேசியில் பேச்சு !!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) இரவு இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

என்னவிடயங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படதாத போதிலும் இந்திய புலனாய்வு அமைப்பான றோ அமைப்பினால் தன்னைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக நேற்றயதினம் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இது குறித்து இந்தியப் பிரதர் மோடிக்கு தெரிந்திருக்க வாய்பில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று இந்திய புலனாய்வு அமைப்பு என்றே ஜனாதிபதி கூறினார் றோ என கூறவில்லை என ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் கூறியிருந்தார்.

தொடர்ந்து இலங்கைக்கான இந்தியத் தூதுவர் இன்று பிற்பகல்வேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்திருந்தார். இச் சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இந்திய பிரதமர் நரேந்திரமோடியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாடியதாக அறியமுடிகிறது.

இதன்போது பிரதமர் மோடி எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்து திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

No comments