கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் 10 மாணவருக்கு வைரஸ் காய்ச்சல்


கோப்பாய் கல்வியல் கல்லூரியில் கற்கும் ஆசிரிய மாணவர்கள் 10 பேர், வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் கல்வியல் கல்லூரியில் ஆசிரிய மாணவர்கள் விடுதியில் ஒரு வகை வைரஸ் காய்சல் திடீரென பரவியதாலேயே, குறித்த 10 மாணவர்களும் காய்ச்சிலினால் பீடிக்கப்பட்டு, கோப்பாய் பிரதேச வைத்தியாசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்நிலையில் கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் சுகாதாரம் சிறப்பாகப் பேணப்படவில்லை என்றும் அங்கு சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாகவும் சுகாராத அதிகாரிகளை மேற்கேள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.


கோப்பாய் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் பணத்தினை மீதப்படுத்தி அரசசாங்கத்திற்கு மீள வழங்கி நல்லபெயர் எடுப்பதிலேயே குறியாக இருப்பதாகவும் இதனால் அங்கு பல்வேறு முரண்நிலைகள் தோற்றம்பெறுவதாகவும் குறப்படுகின்றது.

No comments