ஆறு பேரைக் கொன்ற 10 பேருக்கு மரணதண்டனை


அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் 06 பேரை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகள் 10 பேருக்கு தங்காளை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் அங்குனுகொலபெலஸ்ஸ, திக்வெவ, ரதன்பல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 06 பேர் கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் 06 பேருக்கும் இன்று தங்காளை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவித மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

No comments