பிரான்சில் ஆறாம் நாளில் Pont sur meuse நகரில் இருந்து ஆரம்பமான ஈருருளிப் பயணம்!

பிரான்சில் இருந்து கடந்த 03.09.2018 அன்று பிரான்சு நாடாளுமன்றம் முன்பாக ஆரம்பமான ஜெனிவா நோக்கிய மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் இன்று (08.09.2018) சனிக்கிழமை ஆறாவது நாளில் Sampigny நகரைக் கடந்து Pont sur meuseநகரில் காலை 10.00 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பமானது.

இன்றைய பயணத்தின்போது Pont sur meuse நகரைக் கடந்து செல்லும் வழியில் Boncourt sur meuse நகர மண்டபத்தில் நகர பிதாவிற்கான கோரிக்கை அடங்கிய மனுவைக் கையளித்தபடி Nancy நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.

பிரெஞ்சு மக்கள் குறித்த பயணத்தின் நோக்கத்தினை கேட்டு அறிந்து தமது ஆசியைக் கூறி ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர்.







No comments