ஓமந்தையில் வெடிபொருட்கள் மீட்பு!


 வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழங்குளம் பகுதியிலுள்ள வீட்டுக்காணியிலிருந்து வெடி பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளரால் துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது மிதிவெடிகள், மோட்டார் குண்டு, ஆர்.பி.ஜி ரக குண்டுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து ஓமந்தை பொலிஸாருக்கு வீட்டுக்காணியின் உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், நீதிமன்ற அனுமதியுடன் சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் அப்பகுதியில் மேலும் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர் எனத் தெரியவருகிறது.

No comments