முன்னணி அலுவலக தாக்குதலின் பின்னணியில் சயந்தன்?


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் நேற்று இரவு தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் வடமாகாணசபை உறுப்பினர் க.சயந்தன் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.

நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலக பெயர்பலகையே தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னணியின் செயற்பாடுகள் தமிழ் தேசிய அரசியலை உயிர்ப்புடன் வைத்திருப்பதாலும் அரைகுறை அரசியலமைப்பின் மூலம் இனத்தை ஒடுக்கும் கபட திட்டத்திற்கு கடும் தடையாக இருப்பதாலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீது சிங்கள அரசும் தமிழரசும் கடும் கோபத்தில் இருப்பதாக முன்னணி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாகவே முன்னணி அலுவலகங்கள் தொடர்;ச்சியாக தாக்கப்பட்டுவருவதாக சொல்லப்படுகின்றது.

இதனிடையே கடந்த மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுன் முல்லை மாவட்ட அலுவலகம் நேரடியாக இராணுவத்தால் உடைகப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments