முழுப்பிரச்சினையும் தீராதாம்:பின்வாங்குகின்றார் சுமந்திரன்!

தமிழ்மக்களின் அனைத்து பிரச்சனைகளும் புதிய அரசியலமைப்பால்தீரப்போவதில்லை.எனினும் புதிய அரசியலமைப்பு ஒரு அடிப்படைஆகும். அது இல்லையேல் ஒரு பிரச்சனையையும் ஆராயமுடியாது என காலியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சிங்களமொழியில் உரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளார்.
நிலையான பெரும்பான்மையைக் கொண்ட நாடொன்றில் அனைத்து மக்களுக்கும் சமனான முறையில் குடியுரிமை, உரிமைகள் கிடைக்கத்தக்க வகையில் ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுதல்முக்கியமானது.
சாதாரண பெரும்பான்மை ஆட்சியின் காரணமாக ஏற்பட்ட அநீதிகளை சிங்கள பெரும்பான்மையினர் ஒத்துக்கொள்வதுடன் ஏனையமக்களுக்காக மறுசீரமைப்பு மற்றும் நீதிக்காக முன்வரவேண்டும் எனஅவர்மேலும்குறிப்பிட்டார்.
அரசியலமைப்புசீர்திருத்தம்தொடர்பாகதெற்கில்நடைபெற்றதொடர்ச்சியானகூட்டங்களில்இது 7வதுகூட்டமாகும்.

No comments