வடக்கு கிழக்கில் முகாம்களைப் பலப்படுத்த அரசு நடவடிக்கை


வடக்கு, கிழக்கில் மூலோபாய ரீதியில் முக்கியமான இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படும். தேசிய பாதுகாப்பு தொடர்பில் முப்படையினர் எடுக்கும் தீர்மானங்களை சிலர் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.

பியகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், பொது மக்களின் காணிகள் விடுக்கப்படும்போதும் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டே முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் கூறினார்.

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காதிருப்பதை உறுதிப்படுத்த பாதுகாப்புத் தரப்பினருக்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதுடன், இதற்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் உதவிகளை அரசாங்கம் முழுமையாக வழங்கி வருகிறது என்றும் கூறினார்.

No comments