வடக்கில் கண்ணிவெடி அகற்ற ஜப்பான் நிதியுதவி


வட மாகாணத்தில் இடம்பெறும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு உதவ ஜப்பான் முன்வந்துள்ளது.

இதற்கென ஜப்பான் ஒன்று தசம் இரண்டு ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது.

கண்ணிவெடிகளை அகற்றி, பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு இது உதவும் என்று ஜப்பான் தூதரகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

No comments