மகிந்த மூன்றாவது தடவையாக போட்டி ?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது தடவையாகப் போட்டியிடுவதற்கு, எந்தவிதமான சட்டச் சிக்கலும் இல்லையெனத் தெரிவித்துள்ள, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பான தீர்மானத்தை, நாட்டு மக்களுக்கு மஹிந்த அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில், நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான எந்தவிதமான சட்டச் சிக்கலும் இல்லை எனவும் அவர் கூறினார்.
“எனவே, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டும்” எனவும், “ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது ஒன்றிணைந்த எதிரணியோ அவருக்கு இது தொடர்பில் எந்தவிதமான அழுத்தங்களையும் வழங்காது” எனவும் குறிப்பிட்டார்.
Post a Comment