சிறீதரனிற்கு வந்தது இரத்தக்கண்ணீர்!


கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அண்மைக்காலமாக ரத்தக்கண்ணீர் வருவது வழமையாகிவிட்டது.கொழும்பில் அரசிற்கு முண்டு கொடுத்தவாறு மறுபுறம் ஊரில் வாக்கு வங்கியை தக்கவைக்க இரத்தக்கண்ணீர் வடிப்பது வழமையாகும்.

அவ்வகையில் தனக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியை விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக குத்தகைக்கு கொடுத்ததும், குத்தகைக்காலம் முடிவடைந்த பின்னரும் காணியை மீள ஒப்படைக்காத விடுதி உரிமையாளர் மீது வழக்குத் தொடர்ந்தகை;காக தாக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிக்காக சிறீதரன் கண்ணீர்விட்டுள்ளார்.அதுவும் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா ,கரைச்சி பிரதேசசபை தலைவர் என கும்பலுடன் சென்று கண்ணீர்விட்டுள்ளார்.

வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்ட செயலே ஆகும். ஆனால் காணி உரிமையாளருக்கும், விடுதி உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை தீர்த்துவைக்கவேண்டிய பொலிசாரே அதற்கு வன்முறைவடிவம் கொடுத்து காணியின் உரிமையாளரை கடுமையாக தாக்கியுள்ளனர்.அத்தோடு அதனை தடுக்கமுனைந்த அவரது மனைவியையும், மகளையும் தாக்கியுள்ளமையும், காயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் விலங்கிடப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருப்பதும் சட்டதிட்டங்களுக்கும், மனிதாபிமானத்திற்கும் அப்பாற்பட்ட விடயமாகும்.

புனர்வாழ்வுபெற்ற ஒரு முன்னாள் போராளிக்கு நேர்ந்துள்ள இந்நிலைமையானது மிகுந்த மன வேதனையளிக்கிறது. மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தம்மையே அர்ப்பணித்து வாழ்ந்த இவர்கள் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் புனர்வாழ்வு பெற்று தமது குடும்பங்களுடன் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கும் இன்யை சூழலில் பொலிசார் இவ்வாறான சம்பவங்களை அரங்கேற்றுவது பொருத்தமானதல்ல. இச்சம்பவத்தை திட்டமிட்ட செயலாகவே கருதமுடிகிறது. பொலிசாரின் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும்.

அதேவேளை தமிழ் பேசும் சகோதர்கள் என்ற அடிப்படையில் தமிழர்களின காணிகளை வியாபார நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு எடுக்கும் முஸ்லிம் சகோதரர்கள் நியாயமற்ற முறையில் பொலிசாரை இடைத்தரகர்களாக வைத்து நீததிக்குப்புறம்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதால் தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதை உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியமானதாகும்.


இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கலாசாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டதன் பின்னணியில் எல்லாம் பொலிசாரே இருந்து வருகிறார்கள். அதன் ஒரு அங்கமாக கனகராயன்குளத்தில் விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக தனது காணியை குத்தகைக்கு கொடுத்திருந்த முன்னாள் போராளியான குடும்பஸ்தரும் அவரது மனைவி மற்றும் மகளும் பொலிஸ் பொறுப்பதிகாரியால் தாக்கப்பட்டுள்ளதற்கு தனது வன்மையான கண்டனங்கள் முகநூலில் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

No comments