மீன்பிடி படகு விபத்திற்குள்ளானதில் நால்வர் பலி


பேருவளை கடலில் மீன்பிடிக்க சென்ற படகு ஒன்று கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (11) மாலை பேருவளை கடலிற்கு 7 பேருடன் சென்ற ´மலிது புதா´ என்ற படகு இந்நாட்டு எல்லைக்குள் கப்பல் ஒன்றுடன் மோதி இவ்வாறு விபத்திற்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த 7 பேரில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் காப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த நால்வரினது சடலங்களையும் காப்பற்றப்பட்ட நபரையும் காலி துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வர கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments