முல்லைத்தீவில் செயலிழந்து காணப்படும் அரிசியாலை!!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு விநாயக புரம் கிராமத்தில் சுமார் 50 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்டு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள அரிசியாலை செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாந்தைகிழக்கு பிரதேச செயலர்பிரிவின் கீழ் உள்ள விநாயகபுரம் பகுதியில் யுத்தம் காரணமாக சேதமடைந்து காணப்பட்ட அரிசியாலையினை மீள்குடியமர்வின் பின்னரான அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் சுமார் 50 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு பனங்காமம் பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளபோதும், கடந்த ஆறு ஆண்டுகளாக குறித்த அரிசியாலையை இயங்க வைக்கப்படாத நிலையில் செயலிழந்து காணப்படுகின்றது.


No comments