கொழும்பில் துப்பாக்சி சூடு! முதியவர் பலி!

கொழும்பு கம்பஹா மினுவாங்கொடை பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 68 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூடு இனம் தொியாதவர்களால் மினுவாங்கொடை யட்டியான சந்தியில் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments