கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் காணாமல் போனோரின் உறவுகள் நினைவேந்தல்

சர்வதேச காணாமல் போனோர் தினம் நேற்று  கிளிநொச்சியில் அனுஸ்டிக்கப்பட்டது.
 குறித்த நிகழ்வு நேற்று  பிற்பகல் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் 3மணியளவில் இடம்பெற்றது.
வடக்கின் பல பகுதியிலிருந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

குறித்த நிகழ்வில் வடமாகாண மகளிர் விகார அமைச்சர் அனந்தி சசிதரன் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேசம் காட்டிவரும் பாராபட்சம் தொடர்பில் அவர் விசனம் தெரிவித்தார்.

No comments