வெளிவந்தது உடற்கூறு ஆய்வுகளின் முடிவு! கழுத்து நெரிக்கப்பட்டே பெண் கொலை செய்யப்பட்டார்

கிளிநொச்சியில்  சடலமாக மீட்கப்பட்டப் பெண், கழுத்து நெரிக்கப்பட்டே கொலைச் செய்யப்பட்டுள்ளதாக, உடற்கூறுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன், குறித்த பெண் ஐந்து மாதக் கர்ப்பிணி எனவும் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில்,  கொலை செய்யப்பட்ட அன்று அவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடது புற கண்ணுக்கு மேற்பகுதியில்  குத்தப்பட்ட உட்காயம் ஒன்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கூறுப் பரிசோதனை முடிவடைந்த நிலையில், இறுதிக் கிரிணைகளுக்காக, அவரது சடலம் தந்தையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

No comments