தொடரும் நிலம் மீட்புப் போராட்டம்! போராட்டக்காரரின் ஆதங்கம்!

தொடரும் நிலம் மீட்புப் போராட்டம். அம்பாறை பொத்துவில் கனகர் கிராமம் 1990 இல் உடைமைகளையும் உறவுகளையும் தொலைத்வர்கள் வாழ்வு மீளவில்லை.

தென்தமிழீழம், அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் ஊறணியிலுள்ள 60ம் கட்டை கிராமத்தில் தமிழ் மக்கள் 1950ஆம் ஆண்டு குடியேறினார்கள்.

1972ஆம் ஆண்டில் 278 குடும்பங்கள் கோமாரி கிராமசேவகரின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இதன்பின்னர் 1981ஆம் ஆண்டில் கனகரெட்ணம் (பா உ) அவர்களினூடாக வீட்டுத்திட்டம் ஒன்று அமைக்கப்பட்டு கனகர்கிராமம் என பெயர் சூட்டப்பட்டது. 1988 ஏற்பட்ட யுத்த அசம்பாவித நடவடிக்கையால் இந்தியப்படையினரால் மக்கள் வெளியேற்றப்பட்டு மீண்டும் குடியேறினார்கள். பின் 1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்ரீலங்கா இராணுவ வன்முறைகள் மற்றும் யுத்தம் காணமாக அகதிகளாக்கப்பட்டு இம்மக்கள் வெளிப்பிரதேசங்களான திருக்கோவில் அக்கரைப்பற்று கோமாரி போன்ற பிரதேசங்களில் வாழ்ந்துவந்தனர்.
இம்மக்கள் 1994 காலப்பகுதிகளில் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதி கோரியபோது பயங்கரவாத அச்றுசுறுத்தல் இருப்பதாக காரணம் கூறப்பட்டு இராணுவத்தினரரால் அனுமதி மறுக்கப்பட்டது. அதன் காரணமாக மக்கள் தொடர்ந்து வெளியிடங்களில் அகதிகளாகவே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் மீள் குடியமர அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன். அம்மக்களின் குடியிருப்பு பிரேதேசம் முழுவதும் வனவள பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுள்ளதாக கூறி மக்கள் மீள்குடியமர அரசு அனுமதி மறுத்து வருகின்றது.

மக்களிடம் இக்காணிகளுக்கான உறுதிகள் உள்ளபோதிலும் இந்த நிலத்திற்குச் சொந்தக் காரர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அரசு அப்பகுதியை சுவீகரிக்க முயல்கின்றது.

இந்நிலப்பரப்பு கடற்கரையை அண்டிய நிலப்பரப்பாக உள்ளமையினால் இதனை மாற்று இனத்தவர்களுக்கு வழங்கும் நோக்கில் வனவள பாதுகாப்பு திணைக்களம் சுவீகரிப்பது போன்ற நிலையை உருவாக்கி மக்களை வெளியேற்றிவிட்டு மக்களை வேறு இடங்களில் குடியேறச் செய்த பின்னர் குறித்த காணிகளை ஏனைய இனத்தவ்களுக்கு வழங்கும் திட்டத்துடனேயே அரசியல் வாதிகளும் அரசும் வனவளப் பாதுப்பு அதிகாரிகளும் செயற்பட்டு வருகின்றனர்.

இம்மக்களின் போராட்டம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ள பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் நடராசா சசிதரன் அவர்கள்
மக்களின் போராட்டம் நியாயமானது.

அரசு தமிழ் மக்களின் காணிகளை வனதிணைக்களத்திற்காக சுவீகரிக்க முயல்வதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
அந்தக் காணிகள் அனைத்தும் எமது மக்களிடம் மீளவும் ஒப்படைக்க வேண்டும்.

மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அம்மக்கள் நடாத்தும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் பக்கபலமாக இருப்போம் என்றும் தெரிவித்தார்.

No comments