மக்கள் முன்னணியின் மரம் நடுகை நிகழ்வு


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் “பசுமையின் விடியல் சொந்த மண் சொந்த மரங்கள்” எனும் தொனிப்பொருளில் மரம் நடுகை நிகழ்வின் ஆரம்ப நிகழ்வும் வலிதெற்கு அலுவலக திறப்பு நிகழ்வும் நாளை சனிக்கிழமை காலை 09 மணிக்கு மருதனார்மடத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இணைந்து காங்கேசன்துறை சாலையினை பசுமைப்படுத்தும் செயற்றிட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். அதன் அங்கமாக மரம் நடுகையின் ஆரம்ப நிகழ்வு நாளை மருதனார்மடத்தில் நாடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து கட்சியின் வலிதெற்கு அலுவலக திறப்பு நிகழ்வு இணுவிலில் நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வுகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

No comments