அனைவரையும் வெளியேற்றும் கூட்டமைப்பு!

கூட்டமைப்பின் கூத்துக்களை தொடர்ந்தும் அம்பலப்படுத்தி வருவதால் கூட்டமைப்பினர் ஊடகவியலாளர்கள் மீது காட்டமாக இருப்பது தெரிந்ததே.

அவ்வகையில் தற்போது புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 6 ஆவது அமர்வு நேற்;று நடைபெற்ற போது ஊடகவியலாளர்களை வெளியேற்றிய புதிய நாடகம் நடந்துள்ளது.சபையிலுள்ள கூட்டமைப்பு தவிர்ந்த பதினொரு உறுப்பினர்கள் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்து வெளிநடப்பு செய்திருந்தனர்.  

இதன்போது அமர்வினை பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர்ளை வெளியே செல்லுமாறும் தாம் முக்கிய விடயம் பற்றி கதைக்கவுள்ளதாகவும் கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.குகனேசன் தவிசாளரிடம் தெரிவித்தார். இதனை சபை ஆமோதித்துள்ளதாக தெரிவித்து கூட்டமைப்பின் தவிசாளர் ஊடகவியலாளர்களை வெளியேற்றியுள்ளார்.

ஒருபுறம் யாழ்.மாநகரசபையில் எதிர்கட்சியினை கூட்டமைப்பு வெளியேற்ற மறுபுறம் ஊடகவியலாளர்களை இன்னொரு பகுதியினர் கலைத்துவருகின்றமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

No comments