அதிரடிப்படை போதைபொருள் கடத்துகின்றது: சரத்பொன்சேகா!

சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை போதை பொருள் கடத்தல்களுடன் தொடர்பிருப்பதாக  அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நேற்று வெளியிட்ட கருத்தினால் நாடாளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தமது ஆதரவாளர்கள் பலர் அண்மையில் சோடிக்கப்பட்ட மற்றும் பொய்யான சாட்சியங்களின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி லதீப் உள்ளிட்ட சில அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு உரையாற்றிய அவர், 2016ஆம் ஆண்டு உறுகொடவத்தையில், கைப்பற்றப்பட்ட கொக்கைன் கொள்கலனுடன், லதீப்பின் மைத்துனருக்குத் தொடர்பு உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

வத்தளவில் பாதாள உலக பிரமுகர் மஞ்சு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை குறித்து சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

காவல்துறைக்கு தேசிய காவல்துறை ஆணைக்குழு அதிக சுதந்திரத்தைக் கொடுத்துள்ளது. அதனை சில காவல்துறை அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.” என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே போதைபொருள் கடத்தல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய அதிரடிப்படைக்கு விசேட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments