பல்கலைக்கழக மாணவர் பேரணியில் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரகைத் தாக்குதல்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி மீது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் காவற்துறையால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அழுத்தம் கொடுத்து மற்றும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

இந்த பேரணி காரணமாக கொழும்பு - நகரமண்டப பகுதியில் தற்போதைய நிலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சௌந்தர்ய பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இன்று முற்பகல் இந்த பேரணி ஆரம்பமான நிலையில் , பேரணி நகர மண்டப பகுதியை அண்மித்ததை தொடர்ந்தே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் பேரணி காரணமாக சற்று முன்னர் வோட் பிளேஸ் வீதி மூடப்பட்டதாக காவற்துறை போக்குவரத்து பிரிவு குறிப்பிட்டுள்ளது.

No comments